ஆயிரம் சந்தேகங்கள்: கொரோனா பாலிசி எடுக்கலாமா?ஆயிரம் சந்தேகங்கள்: கொரோனா பாலிசி எடுக்கலாமா? ...  ‘வணிகங்களை நிரந்தரமாக மூட வாய்ப்பளித்து விடக்கூடாது’ ‘வணிகங்களை நிரந்தரமாக மூட வாய்ப்பளித்து விடக்கூடாது’ ...
‘அரசுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
20:02

புதுடில்லி:கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள, தொழில்துறை மற்றும் அரசாங்கத்துக்கு இடையே, முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகர்களுக்கான சேம்பர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சீதாராமன், தொற்று நோய்களின் இரண்டாவது அலையை மீறி, பொருளாதார மறுமலர்ச்சி தொடர்வதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:அரசாங்கத்திற்கும் தொழில்துறையினருக்கும் இடையே, முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்.அது மேலும் பரஸ்பரம் வளர்ச்சியை தக்கவைப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் வளர்ச்சிப் போக்கில் இடையூறுகள் இருக்கக் கூடாது.அப்படி இருப்பின், அது அவநம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் வழிவகுக்கும். இவ்வாறு கூறினார்.

மேலும், மேற்கு வங்கத்தை பற்றி பேசிய அமைச்சர், ‘மாநிலத்தில் உள்ள தொழில்கள் செழிக்க, ‘ஆக்ஸிஜன்’ தேவைப்படுகிறது. மேலும் உலகமயமாக்கப்பட்ட அணுகுமுறையும் தேவைப்படுகிறது’ என தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் பேசும்போது, ‘‘மாநிலத்தில் உள்ள தொழில்கள் வளர இன்னும் நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இந்தியாவின் வரலாறு வங்காளத்திலிருந்து எழுதப்பட்டது. ஆனால், டார்ஜிலிங் தேநீர் போன்ற தயாரிப்புகள் கூட இப்போது நலிந்து வருகின்றன.கோல்கட்டாவின் தொழில்கள், கடந்த காலங்களில் பிரகாசித்தது. மீண்டும் அவற்றை பிரகாசிக்க செய்ய வேண்டும். வங்காளமும் அதன் பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)