புதிய பங்கு வெளியீட்டில் ‘ஆதித்ய பிர்லா சன் லைப்’ புதிய பங்கு வெளியீட்டில் ‘ஆதித்ய பிர்லா சன் லைப்’ ...  லாபம் அளித்த பங்கு வெளியீடுகள் லாபம் அளித்த பங்கு வெளியீடுகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் இந்தியா உலக சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
23:53

புதுடில்லி:இதுவரை இல்லாத வகையில், இந்தியாவில், நடப்பு ஆண்டின், முதல் மூன்று மாதங்களில் மட்டுமே, மொத்தம், 22 புதிய பங்கு வெளியீடுகள் வந்துள்ளன. இந்த பங்கு வெளியீடுகளின் வாயிலாக, 18 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆலோசனை நிறுவனமான, இ.ஒய்., அதன் அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நுகர்வோர் பொருட்கள், சில்லரை விற்பனை, வாகனம் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், அதிகளவில் பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன.

பங்குச் சந்தைகள் இக்காலகட்டத்தில் வளர்ச்சியை கண்டு வந்த காரணத்தினால், பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டன.இதன் காரணமாக, இந்த காலாண்டில், உலகஅளவில் அதிக பங்கு வெளியீடுகளைக் கண்ட நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.

குறு, சிறு நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 22 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன.இருப்பினும், கொரோனா வால், ஜூன் காலாண்டில் இந்த அளவுக்கு எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)