முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ...  இந்தியாவில் ‘5ஜி’ அறிமுகமானால் பயன்படுத்த 4 கோடி பே ரெடி இந்தியாவில் ‘5ஜி’ அறிமுகமானால் பயன்படுத்த 4 கோடி பே ரெடி ...
இரண்டு இலக்க வளர்ச்சியில் நுகர்பொருட்கள் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2021
21:24

புதுடில்லி, மே 14-–நாட்டின் நுகர்பொருட்கள் துறை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 9.4 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இரண்டு இலக்க வளர்ச்சிபெற்றுள்ளது.இத்துறை கிராமப்புறங்களில் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; பெருநகரங்களில் மீட்சியை கண்டு வருகிறது என, தரவு பகுப்பாய்வு நிறுவனமான, ‘நீல்சன்’ தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மார்ச் காலாண்டில் கிராமப்புற சந்தை, 14.6 சதவீத வளர்ச்சியுடன் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு வருகிறது. பெருநகரங்களை பொறுத்த வரை, இரண்டு காலாண்டுகளுக்கு பின், மார்ச் காலாண்டில் சாதகமான வளர்ச்சியை பெற்றுள்ளது.பாரம்பரியமான வினியோக அமைப்புகளின் வாயிலாக, நுகர்வோர் பொருட்கள் விற்பனை, இரண்டு இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. அதுவே, மின்னணு வர்த்தகங்களின் வளர்ச்சி, ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

பெருநகரங்களைப் பொறுத்த வரை, மார்ச் காலாண்டில், 2.2 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய இரு காலண்டுகளை விட இது அதிகமாகும். இருப்பினும், ஜூன் காலாண்டில் நிலைமை வேறுவிதமாக இருக்ககூடும். தற்போது ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ‘ஆன்லைன்’ வாயிலாக வர்த்தகங்கள் வளர்ச்சி காணக்கூடும்.

கிராமப் பகுதிகளில் இருக்கும் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீட்சியைப் பெற்று வருவதை காண முடிகிறது. நுகர்வை பொறுத்தவரை, உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் என இரண்டு பிரிவுமே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)