இரண்டு இலக்க வளர்ச்சியில் நுகர்பொருட்கள் துறை இரண்டு இலக்க வளர்ச்சியில் நுகர்பொருட்கள் துறை ...  ஒரு மாதத்துக்கு பதிலாக 8 நாட்கள்: தொலைபேசி கட்டண அதிருப்தி ஒரு மாதத்துக்கு பதிலாக 8 நாட்கள்: தொலைபேசி கட்டண அதிருப்தி ...
இந்தியாவில் ‘5ஜி’ அறிமுகமானால் பயன்படுத்த 4 கோடி பே ரெடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2021
21:30

புதுடில்லி:இந்தியாவில், ‘5ஜி’ அலைக்கற்றை சேவை துவக்கப்பட்டால், முதல் ஆண்டில் மட்டுமே, 4 கோடி பேர், இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என, தொலைத் தொடர்பு துறை நிறுவனமான, ‘எரிக்சன்’ தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த சேவையை, ‘டிஜிட்டல்’ சேவைகளுடன் வழங்கும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதலாக, 50 சதவீத கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறார்கள் என்றும்; வெறும் 5ஜி இணைப்பு எனில், 10 சதவீதம் அளவுக்கே கூடுதலாக செலுத்த விரும்புவதாகவும், எரிக்சன் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், 5ஜி சேவை குறித்து, 26 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, தரவுகளை சேகரித்துள்ளது, எரிக்சன் நிறுவனம். அதில், உலகின் பல நாடுகள், டிஜிட்டல் சேவைகளுடன் கூடிய, 5ஜி இணைப்புக்கு, 20 – 30 சதவீதம் கூடுதல் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்தியாவில், 5ஜி ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், முதல் ஆண்டில் மட்டும், 4 கோடி ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இந்த சேவையை பெற தயாராக உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கையில், 5ஜி போனை வைத்துக் கொண்டு, 4ஜி சேவை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை, ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையில், 22 சதவீதமாக இருக்கிறது என்கிறது, எரிக்சன் அறிக்கை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)