இந்தியாவில் ‘5ஜி’ அறிமுகமானால் பயன்படுத்த 4 கோடி பே ரெடி இந்தியாவில் ‘5ஜி’ அறிமுகமானால் பயன்படுத்த 4 கோடி பே ரெடி ...  எரிசாம்பல் பயன்பாட்டுக்கு  புதிய வரைவு விதிகள் எரிசாம்பல் பயன்பாட்டுக்கு புதிய வரைவு விதிகள் ...
ஒரு மாதத்துக்கு பதிலாக 8 நாட்கள்: தொலைபேசி கட்டண அதிருப்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
20:32

புதுடில்லி:தொலைதொடர்பு நிறுவனங்கள், அவற்றின் கட்டணங்களுக்கான நாட்களை நிர்ணயிப்பது சம்பந்தமாக நுகர்வோரிடமிருந்து புகார்கள் வருவதை அடுத்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

நிறுவனங்கள், தங்களுடைய தொலைபேசி கட்டணத்தை, ஒரு மாதத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்காமல், 28 நாட்களுக்கு இவ்வளவு என்றே தெரிவிக்கின்றனர்.இது ஒருவகையில், தங்களை மோசடி செய்வ தாக இருக்கிறது என, நுகர்வோர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இது குறித்து பல புகார்களை டிராய் பெற்றுள்ளது.

ஆலோசனை

இதையடுத்து, இது குறித்த கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய டிராய் முன்வந்து உள்ளது. பங்குதாரர்கள், பொதுமக்கள், துறையினர் ஆகியோர் தங்கள் கருத்து களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளது.

இது குறித்து டிராய் தெரிவித்துள்ளதாவது:தொலைதொடர்பு நிறுவனங்களின் சில வகை கட்டணங்கள் குறித்து நுகர்வோர் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். எனவே நுகர்வோருடைய தேவையை திருப்திபடுத்தும் வகையில், கட்டண விபரங்களை அமைக்க டிராய் விரும்புகிறது.சேவையை பயன்படுத்திய பின், கட்டணம் செலுத்தும், ‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது 28, 29, 30 அல்லது 31 நாட்களாக இருந்தாலும், மாதாந்திர அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.ஆனால், ‘பிரீபெய்டு’ திட்டத்தில், நாட்கள் அல்லது வாரங்களின் அடிப்படையிலும் சேவை வழங்கப்படுகிறது.

13 முறை ரீசார்ஜ்

இருப்பினும் மாதாந்திரத்துக்கு, 28 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு, 12 முறைக்கு பதிலாக, 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியதிருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.எனவே, நிறுவனங்கள் கட்டணங்களை, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் என எடுத்துக் கொள்ள இருக்கிறதா அல்லது தனித்தனியாக, 28, 29, 30, 31 நாட்களுக்கு வழங்க இருக்கிறதா என்பதையும் அறிய வேண்டும்.

எனவே, இது குறித்த கருத்துகளை, நிறுவனங்கள் ஜூன் 11ம் தேதிக்குள் வழங்க வேண்டும். அதன் மீதான மாற்றுக் கருத்துகளை, ஜூன் 25ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)