பதிவு செய்த நாள்
20 மே2021
21:31
புதுடில்லி:நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான புதிய விதிகளின்படி இயங்குவதை உறுதி செய்யும் வகையில், பொறுப்பதிகாரியை நியமிக்குமாறு, மின்னணு நிறுவனங்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கும், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் இந்திய நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும், அரசின் இந்த புதிய விதிகள் பொருந்தும்.மின்னணு வர்த்தகத்தில், நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 2020ல் தற்போது சேர்க்கப்பட்டுள்ள புதிய துணை விதி, இம்மாதம், 17ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மின்னணு வர்த்தக நிறுவனங்கள், இந்தியாவில் வசிக்கும் ஒரு நோடல் அதிகாரி அல்லது அதற்கு மாற்றாக மூத்த பணியாளரை நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான புதிய விதிகள், முதன் முதலில், கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்டன. இவற்றை மீறுவோர் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019ன் கீழ் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|