‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களுக்கு அரசின் புதிய அறிவுறுத்தல் ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களுக்கு அரசின் புதிய அறிவுறுத்தல் ...  விருந்தோம்பல் துறை மார்ச் காலாண்டில் சரிவு விருந்தோம்பல் துறை மார்ச் காலாண்டில் சரிவு ...
மீண்டும் தீவிரமடையும் தனியார்மயமாக்கும் பணிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2021
21:45

புதுடில்லி:தொற்றுநோய் பரவல் பிரச்னைகள் ஒருபக்கம் இருந்தாலும், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பணிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

ஏர் இந்தியா, பி.பி.சி.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் ஏற்கனவே இறங்கிவிட்ட காரணத்தால், அவற்றை, இந்த நிதியாண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சிக்கிறது. கொரோனா முதல் பரவல் காரணமாக, இந்த பணிகளை, குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் முடிக்க இயலாமல் போய்விட்டது.

தனியார்மயமாக்கும் பணிகள் குறித்து நேரடியாக பேசவோ, பயணிக்கவோ முடியாத சூழல் உருவாகி விட்டது.ஆனாலும், கடந்த செப்டம்பர் மாதம் முதல், இதற்கான பணிகள் மீண்டும் துவங்க ஆரம்பித்துவிட்டது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே ஏர் இந்தியா, பி.பி.சி.எல்., என சில நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பணிகள் துவங்கிவிட்டது. அந்த பணிகளை இந்த நிதியாண்டுக்குள் முற்றாக நிறைவேற்ற முயற்சிகள் நடந்துவருகின்றன. மேலும், எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீடும் இந்த நிதியாண்டுக்குள் வந்துவிடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குவிலக்கலை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 32 ஆயிரத்து 835 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)