பதிவு செய்த நாள்
20 மே2021
21:45
புதுடில்லி:தொற்றுநோய் பரவல் பிரச்னைகள் ஒருபக்கம் இருந்தாலும், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பணிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
ஏர் இந்தியா, பி.பி.சி.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் ஏற்கனவே இறங்கிவிட்ட காரணத்தால், அவற்றை, இந்த நிதியாண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சிக்கிறது. கொரோனா முதல் பரவல் காரணமாக, இந்த பணிகளை, குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் முடிக்க இயலாமல் போய்விட்டது.
தனியார்மயமாக்கும் பணிகள் குறித்து நேரடியாக பேசவோ, பயணிக்கவோ முடியாத சூழல் உருவாகி விட்டது.ஆனாலும், கடந்த செப்டம்பர் மாதம் முதல், இதற்கான பணிகள் மீண்டும் துவங்க ஆரம்பித்துவிட்டது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே ஏர் இந்தியா, பி.பி.சி.எல்., என சில நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பணிகள் துவங்கிவிட்டது. அந்த பணிகளை இந்த நிதியாண்டுக்குள் முற்றாக நிறைவேற்ற முயற்சிகள் நடந்துவருகின்றன. மேலும், எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீடும் இந்த நிதியாண்டுக்குள் வந்துவிடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குவிலக்கலை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 32 ஆயிரத்து 835 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|