பதிவு செய்த நாள்
01 ஜூன்2021
22:24
மும்பை:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.9 சதவீதமாக இருக்கும் என்றும்; பொருளாதார மீட்சி ஆங்கில எழுத்தான, ‘டபுள்யு’ வடிவில் இருக்கும் என்றும், எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பில்லை
இதற்கு முன், நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 10.4 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது, 7.9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டு வரும் பாதிப்பின் காரணமாக, இந்த திருத்தத்தை மேற்கொண்டதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை எங்களது பகுப்பாய்வு காட்டு கிறது. கிராமப்புறங்களும் நகர்ப்புறங்களை போலவே பாதிக்க பட்டு, தேவையில் பெரிய மீட்சி இல்லாததால், அது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
மேலும், உலகளவில் பொருட்களின் விலை அதிகரிப்பும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.ஆங்கில எழுத்து எனவே வளர்ச்சி ஆங்கில எழுத்தான, ‘வி’ வடிவில் இல்லாமல், ‘டபுள்யு’ வடிவில் இருக்கும் என கருதுகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நாட்டின் நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 9.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|