பதிவு செய்த நாள்
05 ஜூன்2021
19:41
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், கடந்த இரு மாதங்களில் மட்டும், ரீபண்டாக, 26 ஆயிரத்து, 276 கோடி ரூபாயை வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை அறிவித்துள்ளது.
இந்த தொகை மொத்தம், 15.47 லட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில், தனிநபர் வருமான வரி ரீபண்டாக, 15.02 லட்சம் நபர்களுக்கு, 7 ஆயிரத்து, 538 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி ரீபண்டாக, 44 ஆயிரத்து, 531 தாக்கல்களுக்கு, 18 ஆயிரத்து, 738 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, மே 31ம் தேதி வரையிலான காலத்தில் இந்த ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ‘ரீபண்டு’, எந்த நிதியாண்டு வரித் தாக்கலுக்கானது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், இது கடந்த, 2019_-20ம் நிதியாண்டு தாக்கலுக்கானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது ரீபண்டு 43.2 சதவீதம் அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|