திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் இயங்க துவங்கின திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் இயங்க துவங்கின ...  அதிகரிக்கும் மின் நுகர்வு மீட்சி காணும் பொருளாதாரம் அதிகரிக்கும் மின் நுகர்வு மீட்சி காணும் பொருளாதாரம் ...
கேஷ்ப்ரீ டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது எஸ்.பி.ஐ.
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2021
20:09

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் வங்கியியல் தொழில்நுட்ப நிறுவனமான கேஷ்ப்ரீ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதை அறிவித்துள்ளது.

டிஜிட்டல் முறை பேமென்ட்டுகளை மேம்படுத்துவதற்கான அவர்களுக்கிடையே உள்ள ஒத்த நோக்கங்களை இந்த நடவடிக்கை வலுப்படுத்துகிறது. பேமெண்ட் புதுமை படைப்புகளில் முன்னணியாக உள்ள கேஷ்ப்ரீ, இந்தியாவிலும் உலகெங்கிலும் வளர்ந்து வரும் 100,000 க்கும் மேற்பட்ட வணிகங்களுக்கு ஒரே ஒருங்கிணைப்பின் மூலம் ஆன்லைனில் பேமென்ட்டுகளை ஏற்றுக் கொள்ளவும் வழங்கவும் உதவும்.

தற்போது இந்தியாவின் முன்னணி பேமெண்ட் சேவை வழங்குநர்கள் தரவரிசையில் உள்ள கேஷ்ப்ரீ, ஆண்டுதோறும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செயலாக்குகிறது. பேமென்ட்டுகளின் முன்னோடியான பேபால் மூலம் அரும்பி வளர்ந்த கேஷ்ப்ரீயானது, ஏப்பிஸ் பார்ட்னர்ஸ், ஸ்மைல்கேட் மற்றும் ஒய் காம்பினேட்டர் ஆகிய நிறுவனங்களின் ஆதரவைக் கொண்டுள்ளது. கேஷ்ப்ரீ ஆனது இகாமர்ஸ் கட்டண வசூல், விற்பனையாளர் பேமென்ட்டுகள், வணிகத்தல கணக்கு முடித்தல்கள் போன்ற பல்வேறு வணிகக் பேமென்ட் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கேஷ்ப்ரீ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகாஷ் சின்ஹா கூறுகையில், "நாட்டின் நம்பகமான மற்றும் முன்னணி கடன் வழங்குநரான எஸ்.பி.ஐ உடனான எங்கள் கூட்டாண்மை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் மிகப் பெரிய வங்கியின் முதலீடு, கேஷ்ப்ரீயின் புதுமைபடைப்பு மீதான நம்பிக்கையையும், நாங்கள் பேமெண்ட் வணிகத்தில் விரைவாக முன்னேறும் விதத்தையும் காட்டுகிறது. மேலும், இது வளர்ந்து வரும் வணிகங்களுக்கு பேமென்ட்டுகளை வசூலிக்கவும் பட்டுவாடா செய்யவும் விரைவான மற்றும் எளிதான வழியை இயலச் செய்யும் பேமெண்ட்களின் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கேஷ்ப்ரீயின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டவும் செய்கிறது. வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தயாரிப்பில் புதுமை படைப்பு இவற்றில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவதால் இந்த முதலீடு எங்கள் வளர்ச்சி உத்தியுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது” என்று கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)