பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
21:06
புதுடில்லி:நாட்டின் மின் நுகர்வு, நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில், 12.6 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, மின் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் மொத்தம், 25.36 மில்லியன் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவே, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 22.53 மில்லியன் யூனிட்டாக இருந்தது. தற்போதைய இந்த அதிகரிப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மீட்சி கண்டு வருவதை குறிக்கும் விதமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் முழு மாதத்தில், மின் நுகர்வு, 11 சதவீதம் அளவுக்கு சரிந்தது. ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக, பொருளாதார செயல்பாடுகள் குறைந்து விட்டதால், மின் நுகர்வில் இந்த சரிவு அப்போது ஏற்பட்டது.கடந்த ஆண்டு ஜூன் மாத முதல் வாரத்துடன் ஒப்பிடும்போது, தற்போது மின் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், கடந்த மே மாதம் முதல் வாரத்துடன் ஒப்பிடும்போது, சரிவு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, 3.35 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் படிப்படியாக பல இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகள் மீண்டும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|