பதிவு செய்த நாள்
13 ஜூன்2021
00:44
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை, மே மாதத்தில், கடந்த, 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள் மற்றும் நின்றுபோன பொருளாதார செயல்பாடுகள் காரணமாக, எரிபொருள் தேவையானது, மதிப்பீட்டு மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து, மத்திய அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டம் மற்றும் பகுப்பாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டு மே மாதத்தில், நாடு முழுவதிலும் மிக கடுமையான ஊரடங்கு காரணமாக, பொருளாதார செயல்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டது.நடப்பு ஆண்டு மே மாதத்தில், நோய்தொற்று அதிகமாக இருந்த போதிலும், ஊரடங்கு அந்தந்தபகுதிகளுக்கு ஏற்ப பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், பல தொழிற்சாலைகளும் இயங்கின.இதனால், பெட்ரோல் நுகர்வு, கடந்த ஆண்டு மே மாதத்தை விட, 12 சதவீதம் அதிகமாக உள்ளது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 16 சதவீதம் சரிவாகும். மேலும், தொற்றுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 27 சதவீதம் சரிவாகும்.
டீசலை பொறுத்தவரை, கடந்த ஏப்ரலுடன் ஒப்பிடும்போது, 17 சதவீதம் சரிவை கண்டுள்ளது. விமான பயணத்துக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள், 36 சதவீதம் சரிந்துள்ளது.இருப்பினும், சமையல் எரிவாயு தேவையில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி, ஏப்ரல் நிலையே தொடர்கிறது.
ஆனாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 5.5 சதவீதம் சரிவாகும். இதற்கு காரணம், அரசு தொற்று பாதிப்பை முன்னிட்டு, நிவாரண பொருட்களுடன் சிலிண்டர்களையும் வழங்கியதாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|