‘ட்ரோன்’ மூலம் வினியோகம் ‘பிளிப்கார்ட்’ முயற்சி ‘ட்ரோன்’ மூலம் வினியோகம் ‘பிளிப்கார்ட்’ முயற்சி ... ஆயிரம் சந்தேகங்கள் : கடன் தவணை கட்ட முடியவில்லை என்ன செய்வது? ஆயிரம் சந்தேகங்கள் : கடன் தவணை கட்ட முடியவில்லை என்ன செய்வது? ...
வருமான வரிச் சலுகை தொடர்பாக அறிய வேண்டிய நிபந்தனைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
19:00

வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் பெறக்கூடிய வருமான வரிச் சலுகைகள் பரவலாக அறியப்பட்டதே. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், இந்த பிரிவின் கீழ் வரும் பிடித்தங்கள் மற்றும் முதலீடுகளை முக்கியமாக கணக்கில் எடுத்துக்கொள்வதும் வழக்கம். வீட்டுக்கடன், பி.எப்., சேமிப்பு, காப்பீடு, கல்விக் கட்டணம் உள்ளிட்டவை இந்த பிரிவில் வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், இந்த சலுகைகள் அவற்றுக்கான நிபந்தனைகளை கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? வரிச் சலுகை தொடர்பான முக்கிய நிபந்தனைகளை பார்க்கலாம்.


வீட்டுக் கடன்:


வீட்டுக் கடன் அசலுக்காக, திருப்பிச் செலுத்தும் தொகைக்கு விலக்கு கோரலாம் என்றாலும், சொந்த பயன்பாட்டிற்கான வீட்டிற்கு பெறப்பட்ட கடனுக்கு மட்டுமே இது பொருந்தும். மேலும், வங்கி, வீட்டு வசதி நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றிருக்க வேண்டும். எனினும், 24 பி பிரிவில், வட்டிக்கான சலுகைக்கு எல்லா வகை கடனும் பொருந்தும்.


ஐந்து ஆண்டுகள்:


மேலும், வீடு வாங்கிய நிதியாண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் வீட்டை மாற்றிக்கொடுத்தால், வருமான வரிச் சலுகை பொருந்தாது மற்றும் அந்த தொகை வருமானத்துடன் சேர்க்கப்படும். எனினும் வட்டி தொடர்பான சலுகைக்கு இந்த நிபந்தனை கிடையாது. ஐந்தாண்டுகளுக்கு பிறகு வீட்டை மாற்றினாலும் இது பொருந்தாது.


ஆயுள் காப்பீடு:



ஆயுள் காப்பீடு ‘பாலிசி’களுக்கான பிரீமியம் தொகையும் வரிச் சலுகைக்கு உரியது. குடும்பஉறுப்பினர்களுக்கான பாலிசிக்கும் இது பொருந்தும். எனவே ஓய்வு பெற்றவர்கள், பிள்ளைகளுக்கான பாலிசி செலுத்தி அதற்கு வரிச் சலுகை கோரலாம். ஆனால், பிள்ளைகள், பெற்றோருக்கு பாலிசி எடுத்தால் இந்த சலுகை பெற முடியாது.


கல்வி கட்டணம்:


பிள்ளைகளுக்கான கல்வி கட்டணத்திற்கும் வரிச் சலுகை கோரலாம். எனினும், இரண்டு குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்திற்கு மட்டுமே இது பொருந்தும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அவர்கள் கல்வி செலவுக்கு சலுகை கோர முடியாது. ஆனால், மனைவி வருமான வரி செலுத்துபவராக இருந்தால்,அவர் இதற்காக சலுகை பெறலாம்.


வைப்பு நிதி:


பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் செய்யும் சேமிப்பு, வரிச் சலுகைக்கு உரியது என்றாலும், இதற்கு, 1.50 லட்சம் ரூபாய் வரம்பு உண்டு. மனைவி பெயரில் தனி கணக்கு துவக்கினாலும், இந்த வரம்பு பொருந்தும் என்றாலும், வட்டி மற்றும் முதிர்வு தொகைக்கு வரி கிடையாது என்பது அனுகூலமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)