பதிவு செய்த நாள்
18 ஜூன்2021
22:44
புதுடில்லி:மாநில அரசுகள்,பத்திரப் பதிவு கட்டணத்தை குறைத்தால் மட்டுமே ரியல் எஸ்டேட் துறையில் விற்பனையை அதிகரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த நிதியாண்டில், செப்டம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலத்தில், மஹாராஷ்டிரா மாநில அரசு, பத்திரப்பதிவு கட்டணத்தை குறைத்து அறிவித்தது. இது ஓரளவுக்கு விற்பனை அதிகரிக்க உதவிகரமாக இருந்தது.இந்நிலையில், இரண்டாவது அலையின் தாக்கமும் தற்போது சேர்ந்து கொண்டதால், மாநில அரசுகள் 50 சதவீதம் அளவுக்கு பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என, இத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறைந்திருக்கும் நிலையில் பத்திரப் பதிவு கட்டணத்தையும் குறைத்தால், நுகர்வோர் வீடுகள்வாங்க அதிகளவில் முன்வரக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.அலுவலக பிரிவில் தடுப்பூசிகள் அதிகம் பேருக்கு போட்டபிறகே மீட்சி வரும் என்றும் தெரிவிக்கின்றனர்.
பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு திரும்பி வந்த பிறகு, அடுத்த நிதியாண்டில் தான், அலுவலகங்களை குத்தகைக்கு விடுவது மீட்சி காணும் என்றும் கருதுகின்றனர். கடந்த 2020ம் ஆண்டில்,அலுவலகம் மற்றும் வீடுகள் விற்பனை 40 முதல் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டதாக, சொத்து ஆலோசனை நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|