பதிவு செய்த நாள்
19 ஜூன்2021
19:27
புதுடில்லி:கடந்த மே மாதத்தில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில், மாதந்தோறும் முதலீடு செய்யும் திட்டமான எஸ்.ஐ.பி., திட்டத்தின் வாயிலாக செய்யப்படும் முதலீடு, இதுவரை இல்லாத வகையில் அதிகரித்து உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் மொத்தம் 4.67 லட்சம் கோடி ரூபாய், எஸ்.ஐ.பி., திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளாக எஸ்.ஐ.பி., திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் முதலீட்டு தொகை, 30 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பை விட, இரு மடங்கு அதிகமாகும்.
கடந்த, 2016ம் ஆண்டு ஆகஸ்டில், எஸ்.ஐ.பி., திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படும் தொகை 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவே, கடந்த மே மாதத்தில் நான்கு மடங்கு அதிகரித்து, 4.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், எஸ்.ஐ.பி., திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட முதலீடு, 42 ஆயிரத்து, 148 கோடி ரூபாய்.வங்கி தரும் வட்டி குறைவாக இருப்பதை அடுத்து, சிறு முதலீட்டாளர்கள், இந்த எஸ்.ஐ.பி., வாய்ப்பை அதிகம் பயன்படுத்த முன்வந்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|