பதிவு செய்த நாள்
23 ஜூன்2021
06:43
புதுடில்லி : தனியார் மருத்துவமனைகளின் வருவாய், நடப்பு நிதியாண்டில், 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரிக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் நிறைய பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது நடப்பு நிதியாண்டில், தனியார் மருத்துவமனைகளின் வருவாய் அதிகரிக்க உதவிகரமாக இருக்கும்.இரண்டாவது காலாண்டில், கொரோனா தொற்று மட்டுப்படுத்தப்படும் நிலையில், கொரோனா அல்லாத பாதிப்புகளுக்குரிய சிகிச்சைக்கான தேவை அதிகரிக்கும். இது, மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்புவதற்கு உதவிக்கரமாக இருக்கும்.கடந்த நிதியாண்டில், ஒட்டுமொத்த அளவில் மருத்துவமனைகளில், 58 சதவீதம் அளவுக்கு மட்டுமே படுக்கைகள் நிரம்பின.
ஆனால் இந்த நிதியாண்டில் அது, 65 முதல், 70 சதவீதம் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கலாம்.மூலதன செலவுகளை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு அதிகம் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|