வர்த்தகம் » பொது
ஆன்லைன் 'அதிரடி' விற்பனைகளுக்கு கடிவாளம் போடுகிறது மத்திய அரசு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜூன்2021
07:02
புதுடில்லி : விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, உண்மைக்கு மாறான மற்றும் தவறான தகவல்கள் தந்து விற்பனை செய்வது, 'பிளாஷ் சேல்ஸ்' எனும் பெயரில், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அதிகப்படியான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுவது ஆகியவற்றை தடை செய்வது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக, பொதுமக்களின் கருத்தையும் கோருகிறது.
தகவல்:
பொருட்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை கூறி விற்பதில் இருந்து, 'பிளாஷ் சேல்' எனும் பெயரில், அதிகப்படியான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுவது வரையிலான பல்வேறு வழிகளை, பல மின்னணு விற்பனை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.இது குறித்து அண்மைக்காலமாக அதிகளவில் புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து மத்திய அரசு, மின்னணு வர்த்தகம் குறித்த, 'நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2020'ல் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
அத்துடன், மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், 'மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை'யிலும் பதிவு செய்வதை கட்டாயமாக்குவது குறித்தும் பொதுமக்களின் கருத்துகளை கோரியுள்ளது.இன்டர்நெட் வாயிலான தேடல் முடிவுகளை பயன்படுத்தி, பயனர்களை தவறாக வழிநடத்துவதை தடை செய்வது, மின்னணு வர்த்தக நிறுவனங்கள், தலைமை இணக்க அதிகாரி மற்றும் குறை தீர்க்கும் அதிகாரி ஆகியோரை நியமிப்பது போன்ற அம்சங்களும் இந்த திருத்தங்களில் இடம்பெற்று உள்ளன.
அத்துடன், மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், 'மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை'யிலும் பதிவு செய்வதை கட்டாயமாக்குவது குறித்தும் பொதுமக்களின் கருத்துகளை கோரியுள்ளது.இன்டர்நெட் வாயிலான தேடல் முடிவுகளை பயன்படுத்தி, பயனர்களை தவறாக வழிநடத்துவதை தடை செய்வது, மின்னணு வர்த்தக நிறுவனங்கள், தலைமை இணக்க அதிகாரி மற்றும் குறை தீர்க்கும் அதிகாரி ஆகியோரை நியமிப்பது போன்ற அம்சங்களும் இந்த திருத்தங்களில் இடம்பெற்று உள்ளன.
மேலும், இந்த திருத்தங்களின்படி, ஒரு அரசு நிறுவனத்திடமிருந்து, எந்த ஒரு சட்டத்தின் கீழும், விசாரணைக்கான உத்தரவு கிடைத்த, 72 மணி நேரத்துக்குள்ளாக, சம்பந்தப்பட்ட தகவல்களை நிறுவனங்கள் வழங்க வேண்டியதிருக்கும்.
நடவடிக்கை:
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அண்மைக்காலமாகவே, பல மின்னணு வர்த்தக நிறுவனங்கள், அதிரடியான அறிவிப்புகள் வாயிலாக, வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து, விற்பனையை பெருக்கிக் கொள்கின்றன.இதனால் அனைத்து நிறுவனங்களுக்கும், வர்த்தகம் செய்வதற்கான சம வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.
குறிப்பாக, சிறு நிறுவனங்கள் போட்டியிட முடியாத நிலை செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, பல வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மேலும், பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு வகையான புகார்கள் வருகின்றன. இதையடுத்து, இத்தகைய தளங்களில் நடைபெறும் தவறான விற்பனைகளை தடை செய்வது குறித்த முயற்சியில் அரசு இறங்கி உள்ளது.
அதேசமயம் வழக்கமாக நியாயமான வகையில் நடைபெற்று வரும், 'பிளாஷ் சேல்ஸ் ' நடைமுறைக்கு, இதனால் எந்த பாதிப்பும் இருக்காது.மாறாக, 'பேக் டு பேக், பிளாஷ் சேல்ஸ்' எனும் பெயர்களில் வாடிக்கையாளர்களுக்கான தேர்வை குறிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 23,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 23,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 23,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 23,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!