பதிவு செய்த நாள்
01 ஜூலை2021
20:38
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த 11 மாதங்களில், முதன் முறையாக சரிவை கண்டுள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரித்தது, கடுமையான ஊரடங்கு உத்தரவு கள் ஆகியவை காரணமாக, தேவைகள் குறைந்து போனதும், வேலை இழப்புகள் அதிகரித்ததும் இந்த சரிவு ஏற்பட காரணமாக அமைந்துவிட்டன.‘ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளை சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஜூன் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:ஜூன் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு, 48.1 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, மே மாதத்தில், 50.8 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். ஜூன் மாதத்தில், வணிக நம்பிக்கை மங்கிய நிலையில் வேலை இழப்புகளும் அதிகரித்து உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய 8 துறைகளில் வளர்ச்சி
கடந்த மே மாதத்தில், நாட்டின் எட்டு முக்கிய துறைகளில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.குறிப்பாக மின்சாரம், சிமென்ட், உருக்கு, உரம் ஆகிய துறைகளில் உற்பத்தி அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு மே மாதத்தில், உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 21.4 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மே மாதத்தில், 16.8 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், கடந்த ஏப்ரலில் இது, 61 சதவீதமாக அதிகரித்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|