பதிவு செய்த நாள்
01 ஜூலை2021
20:45
புதுடில்லி:எரிபொருள் விலை உயர்வால், விமான கட்டணங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.விமானங்களுக்கான ‘ஜெட் எரிபொருள்’ விலை, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட, 30 சதவீதம் அதிகரித்து, 1 கிலோ லிட்டருக்கு, 68 ஆயிரத்து, 262 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஜனவரியில் இது, 50 ஆயிரத்து, 979 ரூபாயாக இருந்தது.உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்பின் காரணமாக, இந்தியாவிலும் ஜெட் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. விமான கட்டணத்தை நிர்ணயிப்பதில், ஜெட் எரிபொருளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இதனால், எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்தால், பயணக் கட்டணத்தை அதிகரிப்பதை தவிர, நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
கொரோனா தொற்று குறைந்து, பயணத்துக்கு மக்கள் தயாராகும் நிலையில், கட்டண உயர்வு ஒரு தடையாக அமையக்கூடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|