பதிவு செய்த நாள்
13 ஜூலை2021
19:45
புதுடில்லி:நடப்பு ஆண்டில், இந்தியாவில் தங்க நகை நுகர்வுகளை ஊக்குவிக்கும் வகையில், உலக தங்க கவுன்சிலுடன், நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, இருதரப்பும் கூட்டாக இணைந்து, இந்திய நுகர்வோர்களிடம், குறிப்பாக இள வயதினரிடம் தங்க நகைகள் குறித்த விழிப்புணர்வு, அவற்றை விரும்பும் போக்கு ஆகியவற்றை அதிகரிக்க உதவும் வகையிலான ஊடக பிரசாரங்கள் செய்வதற்கு, நிதியுதவி வழங்கப்படும்.
இளம் வயது பெண்கள், தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தாலும், இது போன்ற முயற்சிகளால், அதை அதிகரிக்க இயலும் என, தங்க நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.நகர்ப்புறங்களில் இந்த ஆர்வம் அதிகம் இருக்கிறது. இந்நிலையில், பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், அந்தஸ்தின் குறியீடாகவும் தங்க நகைகளை பார்க்க துவங்கினால், வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்றும் கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்க நகைகள் வடிவமைப்பில், இக்கால பெண்களின் அழகியல் உணர்வுகளுடன் பொருந்தக்கூடிய ஆக்கப்பூர்வமான தீர்வுகள் தேவை என்று கருதுவதாகவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|