பதிவு செய்த நாள்
13 ஜூலை2021
20:03
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ‘ஹைபிரிட்’ பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 27 ஆயிரத்து, 220 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய காலாண்டில், இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட இரு மடங்கு அதிகமாகும்.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இத்திட்டத்தில், 13 ஆயிரத்து, 55 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.ஹைபிரிட் பண்டுகள் என்பவை, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் ஒருவகையாகும். இத்திட்டங்களில், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகிய இரண்டிலும் சேர்த்து முதலீடு செய்யப்படும். சில சமயங்களில், தங்கமும் சேர்த்துக் கொள்ளப்படும்.
சந்தை அபாயங்களை குறைத்து கொள்ள விரும்பும் அதே சமயத்தில், பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பண்டு திட்டம் இதுவாகும்.தற்போது பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் ஆகிய மூன்றும் நல்ல வருவாயை தருவதால், இந்த ஹைபிரிட் திட்டங்களில், முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|