பதிவு செய்த நாள்
14 ஜூலை2021
20:17
புதுடில்லி:சீனா --– இந்தியா இடையேயான உரசல்களையும் மீறி, இருதரப்பு வர்த்தகம், நடப்பு ஆண்டின் முதல் பாதியில், 4.31 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, சீன சுங்க துறை தெரிவித்துள்ளது.இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 62.7 சதவீதம் அதிகமாகும்.
சீனாவுக்கான ஏற்றுமதி, 69.6 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 55.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்தியாவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதி, மதிப்பீட்டு காலத்தில், 1.10 லட்சம் கோடி ரூபாய். சீனாவிலிருந்து இறக்குமதி, 3.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 60.4 சதவீதம் அதிகமாகும்.
கொரோனாவை முன்னிட்டு, சீனாவிலிருந்து ஆக்சிஜன் வென்டிலேட்டர்ஸ், ஜெனரேட்டர்கள், மானிட்டர்கள், மருத்துவ சாதனங்கள், மருந்துகள் ஆகியவற்றை இந்தியா அதிகம் இறக்குமதி செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|