பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் ...  நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரிப்பு ...
‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தை வளைக்க ‘ரிலையன்ஸ்’ தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2021
19:15

புதுடில்லி:முகேஷ் அம்பானியின் தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், ‘ஜஸ்ட்டயல்’ நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இது குறித்து, நன்கு அறிந்தவர்கள் தரப்பில் கூறியதாவது:ஜஸ்ட் டயல் நிறுவனம், உள்ளூர் தகவல் தேடல் சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, தன்னுடைய சில்லரை விற்பனை வணிகத்தை மேலும் பலமுள்ளதாக செய்யலாம் என, ரிலையன்ஸ் கருதுகிறது.இதையடுத்து, ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் நிறுவனர்களிடமிருந்து பெரும்பான்மை பங்கை கையகப்படுத்த, ரிலையன்ஸ் பேச்சு நடத்தி வருகிறது.

இவ்வகையில், ரிலையன்ஸ் 6,000 – 6,750 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய தயாராக இருக்கிறது.இந்த பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தால், வணிகங்கள் குறித்த, 25 ஆண்டுகால தகவல் தேடல் தரவுகள், ரிலையன்ஸ் வசம் வரும். மேலும், ஜஸ்ட்டயல் சேவை, நாடு முழுக்க பரவி இருப்பதால், அது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பேமென்ட் ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும்.நிதி திரட்டுவது சம்பந்தமாக, ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் நிர்வாக குழு இன்று கூட உள்ளது. இதில் ரிலையன்ஸ் முதலீடு குறித்து பேசப்படக்கூடும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

‘பியூச்சர்’ குழும வணிகங்களை கையகப்படுத்துவது நிறைவேறாமல், வழக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், பிற முயற்சிகளை தொடர்கிறது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)