பதிவு செய்த நாள்
16 ஜூலை2021
19:49
புதுடில்லி:நாட்டின் பொருளாதாரம் 2023ம் நிதியாண்டில் இருந்து 6.5 முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியைக் காணத் துவங்கும் என தலைமை பொருளாதார ஆலோசகர் கே.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:இதுவரை அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவது போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காணத் துவங்கி இருக்கிறது. கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் மீட்சி காணத் துவங்கிய போதும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இரண்டாவது அலையின் காரணமாக அந்த நிதியாண்டின் இரண்டாவது பாதி பாதிப்புக்கு உள்ளானது.
இரண்டாவது அலை உடல்நலத்தில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்திய போதும் அதன் பொருளாதார பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.இதற்கு இரண்டாவது அலையின் காலம் முதல் அலையை விட குறைவாக இருந்ததும்; ஊரடங்குகள் மாநில அளவில் மேற்கொள்ளப்பட்டதும் முக்கியமான காரணங்களாகும்.இரண்டாவது அலையின் பாதிப்பு பெரிதாக இருக்காது என நாங்கள் கருதுகிறோம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகைகள் குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் வரம்பு மாற்றியமைக்கப்பட்டது வாராக்கடன் வங்கி அமைப்பது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|