பதிவு செய்த நாள்
19 ஜூலை2021
19:59
ஜிஇ ரென்யூவபிள் எனர்ஜி நிறுவனம் அதன் 44,444வது விண்ட் டர்பைன் பிளேடை எல்எம் விண்ட் பவரின் விண்ட் டர்பைன் பிளேட் தொழிற்சாலைகளில் தயாரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த பிளேட்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் குஜராத் மாநிலம் வதோரா ஆகிய நகரங்களிலுள்ள இரு தொழிற்சாலைகளில் தயாராகின்றன.
எல்எம் விண்ட் பவர் செயல்பாடுகள் இந்தியாவில் பெங்களூருக்கு அருகேயுள்ள ஹோஸ்கோடேவில் 1994ம் ஆண்டு 13.4 மீட்டார் பிளேட்கள் தயாரிப்புடன் தொடங்கியது. தற்போது புதுமை மற்றும் ஆர்வம் காரணமாக இந்தியாவில் தயாராகும் பிளேட்களின் நீளம் 80 மீட்டருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சாதனை குறித்து குறித்து இந்தியாவிலுள்ள எல்எம் விண்ட் பவர் செயல் பிரிவுத் தலைவர் பானி குஜ்ஜாரி கூறுகையில், ‘வடிவமைப்பு, மூல முன் மாதிரி மற்றும் பரிசோதனை தொடங்கி தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் சேவை வரை பிளேட்கள் குறித்த அனைத்து விவரங்களையும் நாங்கள் நன்கு அறிவோம். இந்தியாவிலுள்ள எங்கள் தொழிற்சாலைகளிலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம் 44,444வதுபிளேட் தயாரான நிலையில், பசுமை உலகுக்கான நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளேட்கள் தயாரிப்பில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.
27ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது முதல் எல்எம் விண்ட்பவர் புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பிளேட்களை வடிவமைத்துத் தயாரித்ததைத் தொடர்ந்து இதுவரை சுமார் 6 மில்லியன் குடும்பங்களுக்கான 11+ ஜிடபிள்யூ காற்று ஆற்றல் மற்றும் சக்தியை நிறுவ உதவியுள்ளது. தற்போது இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளில் தயாராகும் பிளேட்களின் 70% ஏற்றுமதியாவதுடன், ‘உலகுத்துக்கு தயாரி’ என்னும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு உறுதுணையாகவும் இருக்கும், என்று ஜிஇ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|