ஆயிரம் சந்தேகங்கள்ஆயிரம் சந்தேகங்கள் ...  முதலீட்டாளர்களை சுண்டி இழுக்கும் தங்க இ.டி.எப்., பண்டு முதலீட்டாளர்களை சுண்டி இழுக்கும் தங்க இ.டி.எப்., பண்டு ...
இந்தியாவில் 44,444வது விண்ட் டர்பைன் பிளேட் : ஜிஇ ரென்யூவபிள் எனர்ஜி சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2021
19:59

ஜிஇ ரென்யூவபிள் எனர்ஜி நிறுவனம் அதன் 44,444வது விண்ட் டர்பைன் பிளேடை எல்எம் விண்ட் பவரின் விண்ட் டர்பைன் பிளேட் தொழிற்சாலைகளில் தயாரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த பிளேட்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் குஜராத் மாநிலம் வதோரா ஆகிய நகரங்களிலுள்ள இரு தொழிற்சாலைகளில் தயாராகின்றன.

எல்எம் விண்ட் பவர் செயல்பாடுகள் இந்தியாவில் பெங்களூருக்கு அருகேயுள்ள ஹோஸ்கோடேவில் 1994ம் ஆண்டு 13.4 மீட்டார் பிளேட்கள் தயாரிப்புடன் தொடங்கியது. தற்போது புதுமை மற்றும் ஆர்வம் காரணமாக இந்தியாவில் தயாராகும் பிளேட்களின் நீளம் 80 மீட்டருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை குறித்து குறித்து இந்தியாவிலுள்ள எல்எம் விண்ட் பவர் செயல் பிரிவுத் தலைவர் பானி குஜ்ஜாரி கூறுகையில், ‘வடிவமைப்பு, மூல முன் மாதிரி மற்றும் பரிசோதனை தொடங்கி தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் சேவை வரை பிளேட்கள் குறித்த அனைத்து விவரங்களையும் நாங்கள் நன்கு அறிவோம். இந்தியாவிலுள்ள எங்கள் தொழிற்சாலைகளிலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம் 44,444வதுபிளேட் தயாரான நிலையில், பசுமை உலகுக்கான நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளேட்கள் தயாரிப்பில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.

27ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது முதல் எல்எம் விண்ட்பவர் புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பிளேட்களை வடிவமைத்துத் தயாரித்ததைத் தொடர்ந்து இதுவரை சுமார் 6 மில்லியன் குடும்பங்களுக்கான 11+ ஜிடபிள்யூ காற்று ஆற்றல் மற்றும் சக்தியை நிறுவ உதவியுள்ளது. தற்போது இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளில் தயாராகும் பிளேட்களின் 70% ஏற்றுமதியாவதுடன், ‘உலகுத்துக்கு தயாரி’ என்னும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு உறுதுணையாகவும் இருக்கும், என்று ஜிஇ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)