பதிவு செய்த நாள்
20 ஜூலை2021
03:59
புதுடில்லி : தங்க இ.டி.எப்., பண்டுகளில் முதலீட்டாளர்கள், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1,328 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
தங்க இ.டி.எப்., பண்டுகளில் முதலீட்டை மேற்கொள்வது, வரும் மாதங்களிலும் தொடரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். பரிவர்த்தனைதங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக, தங்க இ.டி.எப்., பண்டுகள் கருதப்படுகின்றன.இவை, தங்கத்தை அடிப்படையாக கொண்டு, பங்குச் சந்தைகளில் பரிவர்த்தனை செய்யப்படும் பண்டுகளாகும் .தற்போதைய சிக்கலான காலகட்டத்தில், பிற பிரிவுகளில் முதலீடு செய்வதை விட, தங்கத்தில் முதலீடு செய்வது அதிக பாதுகாப்பானது எனக் கருதுவதால், முதலீட்டாளர்கள் இந்த பண்டை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகின்றனர்.
இதையடுத்து கடந்த ஆண்டிலிருந்து இப்பிரிவில் முதலீடு அதிகரித்து வருகிறது.கடந்த நிதியாண்டின் இதே ஜூன் காலாண்டில், இத்திட்டத்தில், 2,040 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டது என, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.தங்க இ.எடி.எப்., பண்டுகளில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு ஜூன் இறுதியில், 10 ஆயிரத்து, 857 கோடியாக இருந்தது.225 கோடி ரூபாய்இது, நடப்பு ஆண்டு ஜூன் இறுதியில் 16 ஆயிரத்து 225 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்பிரிவில் மேற்கொண்ட முதலீட்டாளர்கள் கணக்குகளின் எண்ணிக்கையும், மூன்று மடங்கு அதிகரித்து, 18.32 லட்சமாக உயர்ந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|