ஒற்றைச்சாளர முறை விண்ணப்பம் தேவையற்ற விபரம் கேட்கக் கூடாது ஒற்றைச்சாளர முறை விண்ணப்பம் தேவையற்ற விபரம் கேட்கக் கூடாது ...  சிறப்பாக பணிபுரிந்தால் ‘பென்ஸ்’ கார் பரிசு சிறப்பாக பணிபுரிந்தால் ‘பென்ஸ்’ கார் பரிசு ...
பசுமை ஹைட்ரஜன் ஆலை முதலில் அமைக்கிறது ஐ.ஓ.சி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2021
19:17

புதுடில்லி:இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான, ஐ.ஓ.சி., எனும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், நாட்டின் முதல், ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை, அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கிறது.

புதை படிவ எரிபொருட்களுக்கு பதிலாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருள், ‘பசுமை ஹைட்ரஜன்’ என அழைக்கப் படுகிறது. எண்ணெய் மற்றும் துாய்மையான எரிசக்தி ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருவதை அடுத்து, எதிர்கால நோக்கில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது:இது, நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையாக இருக்கும். எதிர்கால எரிபொருள் தேவையில் ஹைட்ரஜனின் பங்கு அதிகரிக்கும்.எதிர்காலத்தின் எரிபொருளாக ஹைட்ரஜன் இருக்கும் எனக் கருதுகிறோம். ஐ.ஓ.சி., நிறுவனம் மேலும் பல ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, எங்களுடைய தற்போதைய சுத்திகரிப்பு திறனை, 2.5 கோடி டன் அளவுக்கு கூடுதலாக அதிகரிக்க உள்ளோம். சி.பி.சி.எல்., நிறுவனத்துடன் சேர்ந்து, தற்போது 8.05 கோடி டன் அளவுக்கு சுத்திகரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)