பதிவு செய்த நாள்
23 ஜூலை2021
20:41
புதுடில்லி:புதிய தலைமுறை ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களான ‘ஸொமாட்டோ, பேடிஎம்’ வரிசையில், அடுத்து, ‘பாலிசிபஜார்’ நிறுவனமும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பாலிசிபஜார் நிறுவனம், இன்னும் நான்கு மாதங்களுக்குள்ளாக பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது என்றும், இந்த வெளியீட்டின் வாயிலாக, 6,500 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சந்தையில் உள்ளோர் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையே, இந்நிறுவனம் தன்னுடைய சந்தை மதிப்பை 5 பில்லியன் டாலராக அதாவது, 37 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்த்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
தற்சமயம் இந்நிறுவனத்தின் மதிப்பு, 18 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, புதிய பங்குகளை மட்டுமின்றி; பங்குதாரர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பங்குதாரர்கள் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்துவிட்டு, வெளியேற முடியும்.
டிசம்பர் மாத வாக்கில் இந்நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரலாம் என்றும், விரைவில் அனுமதி கோரி, ‘செபி’க்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.பாலிசிபஜாரின் தாய் நிறுவனமான, ‘பாலிசிபஜார் பைன்டெக்’ பங்கு வெளியீட்டை நிர்வகிக்க, மூன்று, நான்கு முதலீட்டு வங்கிகளை அணுகி உள்ளது.
ஆனந்த் ரதி
நிதிச் சேவைகளை வழங்கி வரும், ‘ஆனந்த் ரதி வெல்த்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக செபிக்கு விண்ணப்பித்து உள்ளது.ஏற்கனவே, கடந்த 2018ல், இந்நிறுவனம் 425 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், சந்தை சூழலால் அந்த முயற்சியை கைவிட்டு விட்டது. தற்போது மீண்டும் புதிதாக முயற்சியை துவங்கி உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|