முதலீட்டாளரை ஈர்க்கும் இந்திய பத்திர சந்தை முதலீட்டாளரை ஈர்க்கும் இந்திய பத்திர சந்தை ...  பி.எஸ்.இ., சந்தை மதிப்பு 235 லட்சம் கோடி ரூபாய் பி.எஸ்.இ., சந்தை மதிப்பு 235 லட்சம் கோடி ரூபாய் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் 'பாலிசிபஜார்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
20:41

புதுடில்லி:புதிய தலைமுறை ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களான ‘ஸொமாட்டோ, பேடிஎம்’ வரிசையில், அடுத்து, ‘பாலிசிபஜார்’ நிறுவனமும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பாலிசிபஜார் நிறுவனம், இன்னும் நான்கு மாதங்களுக்குள்ளாக பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது என்றும், இந்த வெளியீட்டின் வாயிலாக, 6,500 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சந்தையில் உள்ளோர் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையே, இந்நிறுவனம் தன்னுடைய சந்தை மதிப்பை 5 பில்லியன் டாலராக அதாவது, 37 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்த்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

தற்சமயம் இந்நிறுவனத்தின் மதிப்பு, 18 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, புதிய பங்குகளை மட்டுமின்றி; பங்குதாரர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பங்குதாரர்கள் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்துவிட்டு, வெளியேற முடியும்.

டிசம்பர் மாத வாக்கில் இந்நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரலாம் என்றும், விரைவில் அனுமதி கோரி, ‘செபி’க்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.பாலிசிபஜாரின் தாய் நிறுவனமான, ‘பாலிசிபஜார் பைன்டெக்’ பங்கு வெளியீட்டை நிர்வகிக்க, மூன்று, நான்கு முதலீட்டு வங்கிகளை அணுகி உள்ளது.

ஆனந்த் ரதி

நிதிச் சேவைகளை வழங்கி வரும், ‘ஆனந்த் ரதி வெல்த்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக செபிக்கு விண்ணப்பித்து உள்ளது.ஏற்கனவே, கடந்த 2018ல், இந்நிறுவனம் 425 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், சந்தை சூழலால் அந்த முயற்சியை கைவிட்டு விட்டது. தற்போது மீண்டும் புதிதாக முயற்சியை துவங்கி உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)