நம்பிக்கை அளிக்கும் நுகர்வு தேவை நம்பிக்கை அளிக்கும் நுகர்வு தேவை ...  ஆயிரம் சந்தேகங்கள் ஆயிரம் சந்தேகங்கள் ...
மருத்துவ காப்பீடு பாலிசியை மாற்றுவதற்கான வழிமுறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
19:12

பல்வேறு காரணங்களுக்காக பாலிசிதாரர், ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு பாலிசியை மாற்றிக் கொள்ளலாம்.


மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது போல, மருத்துவ காப்பீடு திட்டங்களின் அடிப்படை அம்சங்களையும் பாலிசிதாரர் அறிந்திருப்பது அவசியம். அதே போல, ஒரு காப்பீடு நிறுவனத்தில் இருந்து இன்னொரு காப்பீடு நிறுவனத்திற்கு பாலிசியை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதையும் அறிந்திருக்க வேண்டும். பாலிசியில் மேம்பட்ட அம்சங்கள் தேவை என்றாலோ அல்லது காப்பீடு நிறுவனத்தின் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, இந்த வசதியை நாடலாம். இதற்கான வழிமுறைகளை பாலிசிதாரர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.


வழிமுறைகள்


மருத்துவ காப்பீடு பெற்றிருப்பவர்கள், அதன் சேவையில் அதிருப்தி அடைந்தால் பாலிசியை வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு, 2011ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. தற்போது உள்ள பாலிசி முதிர்வடைய 45 முதல் 60 நாட்கள் இருப்பதற்கு முன், புதிய நிறுவனத்திடம் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் பாலிசியை மாற்றிக் கொள்ளலாம்.


குடும்ப பாலிசி அல்லது கார்ப்பரேட் பாலிசியை இவ்வாறு மாற்றிக் கொள்ளலாம். பொதுவாக பாலிசியை மாற்றிக்கொள்ளும் போது, மருத்துவ பரிசோதனை அல்லது விண்ணப்ப படிவத்தை மீண்டும் பூர்த்தி செய்யுமாறு காப்பீடு நிறுவனங்கள் கேட்பதில்லை. ஆனால், ஆரோக்கியம் தொடர்பான உறுதி மற்றும் ஏற்கனவே உள்ள நோய்கள் தொடர்பான தகவல்களை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.


சரியான தகவல்களை அளிப்பது அவசியம். இல்லையெனில், பின்னர் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. பின்னாளில் கோரிக்கை நிராகரிக்கப்படும் அபாயத்தை குறைக்க, சரியான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாற்றல் கோரிக்கை வந்ததும், காப்பீடு நிறுவனம், முந்தைய காப்பீடு நிறுவனத்தை அணுகி தகவல்களை பெற்றுக்கொள்ளும்.


எப்போது நாடலாம்?



பொதுவாக, மாற்றல் கோரிக்கை ஏற்பு அல்லது நிராகரிப்பு தொடர்பாக நிறுவனம் 15 நாட்களுக்குள் தகவல் அளிக்கும். பதினைந்து நாட்களுக்கு மேலானால், கோரிக்கை கட்டாயம் ஏற்கப்பட வேண்டும். புதிய நிறுவனம், பாலிசியில் உள்ள காப்பீடு தொகைக்கு நிகரான தொகையை அளிக்க வேண்டும். பாலிசிதாரர் கூடுதல் தொகைக்கும் கோரிக்கை வைக்கலாம்.


பாலிசியின் பலன்கள் மற்றும் காத்திருப்பு கால பலன்களும் மாறிய பாலிசியில் தொடரும். நோ கிளைம் போனசும் தொடரும் என்றாலும், பிரிமியம் தொகை வேறுபடலாம். புதிய நிறுவனம், கூடுதல் தொகை கேட்கலாம். இடர் அம்சத்தின் அடிப்படையில் புதிய நிறுவனம் இதை தீர்மானிக்கும் உரிமை கொண்டது.ஒரு பாலிசி குறைந்த பிரிமியம் கொண்டதாக அல்லது மேம்பட்ட அம்சங்களை கொண்டதாக இருந்தால், அந்த பலன்களை பெறும் வகையில் பாலிசியை மாற்றிக் கொள்ளலாம்.


அதிக மருத்துவமனைகள் வலைப்பின்னல், துணை நிபந்தனைகளில் சலுகைகள் போன்ற அம்சங்களுக்காக மாறலாம். ஆனால், பிரிமியம் தொகையை மட்டும் பார்க்காமல், பாலிசியின் மற்ற அம்சங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நிறுவன சேவையில் அதிருப்தி அடைந்தாலும் பாலிசியை மாற்றிக் கொள்ளலாம். ஒரு சில நிறுவன பாலிசிகள் வரம்புகளை கொண்டதாக இருக்கும் போது, கூடுதல் பாதுகாப்பிற்காகவும் பாலிசியை மாற்றிக் கொள்ளலாம். பாலிசியை மாற்றுவது பலன் அளிக்கும் என உறுதியாக நினைத்தால், உரிய காலத்திற்குள் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)