பதிவு செய்த நாள்
27 ஜூலை2021
07:04
மும்பை : கிளன்மார்க் பார்மா குழுமத்தைச் சேர்ந்த, கிளன்மார்க் லைப் சயின்சஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு இன்று துவங்கி, நாளை மறுதினம் முடிவடைகிறது. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 695 ரூபாய்; அதிகபட்ச விலை, 720 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், 1,060 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், கிளன்மார்க் பார்மா நிறுவனர்களின் 63 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. சில்லரை முதலீட்டாளர்களுக்கு, 35 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டுஉள்ளன. குறைந்தபட்சம், 20 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் இந்த பங்கு வெளியீட்டில் விண்ணப்பிக்கலாம். புதிய பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் நிதியில், பழைய கடன்களை திரும்பத் தரவும், விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ளவும் கிளன்மார்க் லைப் சயின்சஸ் திட்டமிட்டுள்ளது.
கடந்த 1977ல், மருந்துகள் தயாரிப்பில் இறங்கிய கிளன்மார்க் பார்மா நிறுவனம், 2001ல், ஏ.பி.ஐ., எனப்படும் மூலக்கூறு மருந்துகளை தயாரிக்கத் துவங்கியது. இந்நிலையில், 2019ல், கிளன்மார்க் லைப் சயின்சஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் மூலக்கூறு மருந்துகள் பிரிவு கொண்டு வரப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|