பதிவு செய்த நாள்
27 ஜூலை2021
07:08
புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மத்திய அரசின் நிகர வரி வருவாய், 5 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி லோக்சபாவில் பேசியதாவது:நடப்பு, 2021 – 22ம் நிதியாண்டின், ஏப்., –ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நிகர வரி வருவாய் 86 சதவீதம் உயர்ந்து, 5 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், நேரடி வரி நிகர வருவாய், 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாகும். இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ஈட்டப்பட்ட, 1 லட்சத்து 17 ஆயிரத்து 783 கோடி ரூபாயை விட, 109.3 சதவீதம் அதிகம்.இதே காலத்தில், மறைமுக வரி நிகர வருவாய் 70.3 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து, 82 ஆயிரத்து 862 கோடியில் இருந்து, 3 லட்சத்து 11 ஆயிரத்து 398 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|