பதிவு செய்த நாள்
27 ஜூலை2021
19:25
புதுடில்லி:சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயம், ‘கெய்ர்ன் எனர்ஜி’ வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த 2020 டிசம்பரில் ‘கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திடம் வரி நிலுவைக்காக வசூலித்த, 10 ஆயிரத்து 247 கோடி ரூபாயை திரும்பத் தர வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இது குறித்து ராஜ்யசபாவில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது: கெய்ர்ன் வழக்கில், சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, இந்தாண்டு மார்ச் 22ல் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இதனிடையே, இந்த தீர்ப்பை காண்பித்து, கெய்ர்ன் நிறுவனம், பிரான்ஸ் நீதிமன்றத்தில், இந்தியாவின் சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவை பெற்றுள்ளது.
இதற்கு தடையுத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வழக்கிற்காக, நன்கு அனுபவம் வாய்ந்த சர்வதேச சட்ட ஆலோசனை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் சொத்துக்களை காக்க, அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|