பதிவு செய்த நாள்
27 ஜூலை2021
19:29
கோல்கட்டா:‘சாகுபடி செய்யும் தேயிலையில், 50 சதவீதத்தை, பொது ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்’ என, இந்திய தேயிலை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில், தேயிலை விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. இதையொட்டி, தேயிலை விலையை ஸ்திரமாக வைக்கும் நோக்கில், உற்பத்தியில் பாதியை பொது ஏலத்தில் விற்குமாறு, தேயிலை நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ‘இந்த விதிமுறையை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தேயிலை வாரியம் தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, ‘மெக்லாய்டு ரசல்’ நிறுவனத்தின் இயக்குனர் அசம் மோனம் கூறியதாவது: நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், 50 சதவீத பங்களிப்பை, சிறிய தேயிலை விவசாயிகள் வழங்குகின்றனர். அவர்களின் நலனுக்காக, கட்டாய ஏல விற்பனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் ஏற்றுமதி, பாக்கெட் தேயிலை ஆகியவற்றில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|