பதிவு செய்த நாள்
27 ஜூலை2021
19:42
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நேற்று, 10 ஆயிரமாவது புதிய ‘சபாரி’ காரை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணியர் வாகன விற்பனை பிரிவு தலைவர், சைலேஷ் சந்திரா கூறியதாவது:மஹாராஷ்டிர மாநிலம் புனே தொழிற்சாலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட, புதிய சபாரி கார் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு, பிப்ரவரியில், 100வது கார் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நான்கு மாதங்களில், 9 ஆயிரத்து 900 சபாரி கார்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
கொரோனாவால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், குறுகிய காலத்தில், 10 ஆயிரம் சபாரி கார்களை நிறுவனம் தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளது.உலகப் புகழ் பெற்ற ‘லேண்டுரோவர்–டி8’ காரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள, புதிய சபாரி காருக்கு, சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|