உணவு பதப்படுத்துதல் துறை: அன்னிய முதலீடு சரிவு உணவு பதப்படுத்துதல் துறை: அன்னிய முதலீடு சரிவு ... முதலீட்டு கலாச்சாரத்தை வளர்க்க அப்ஸ்டாக்ஸ் புதிய வியூகம் முதலீட்டு கலாச்சாரத்தை வளர்க்க அப்ஸ்டாக்ஸ் புதிய வியூகம் ...
பிளாஸ்டிக் துறை ஏற்றுமதி ரூ.25,650 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
19:44

புதுடில்லி:நடப்பு, 2021 – 22ம் நிதியாண்டின், ஏப்.,–ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி, 55 சதவீதம் உயர்ந்து, 25 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது, கடந்த, 2019–20ம் நிதியாண்டின், இதே காலத்தில், 16 ஆயிரத்து 575 கோடி ரூபாயாக இருந்ததாக, பிளாஸ்டிக் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.இது குறித்து இக்கவுன்சில் தலைவர் அரவிந்த் கோயங்கா கூறியதாவது:கவுன்சில் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் காரணமாக, கொரோனா பிரச்னைக்கு இடையிலும், பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

இதில், நுகர்வோர் மற்றும் வீட்டுப் பொருட்கள், லேமினேட்டுகள், பைப் மற்றும் பிட்டிங்குகள் உள்ளிட்ட பிரிவுகளின் ஏற்றுமதி, 100 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கேசம் மற்றும் அதுசார்ந்த பொருட்கள் ஏற்றுமதி, 350 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பாலியஸ்டர் பிலிம்கள், மீன் வலைகள், பேக்கிங் பொருட்கள், எழுது பொருட்கள், பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் ஆகியவையும் இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியா, 1,215 கோடி ரூபாய் மதிப்பிலான, முக கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள், பிலிம்கள், பேக்கிங் பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரான்சுக்கு ஏற்றுமதி செய்கிறது. பிரான்சுக்கு, 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, மதிப்பு கூட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பிரிட்டன், ஆண்டுக்கு, 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதில் இந்தியாவின் பங்கு, 2 ஆயிரத்து 775 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. இதை, மதிப்பு கூட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி மூலம், 42 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஐரோப்பாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம், வெளிநாட்டு கிடங்கு வாடகைக்கு மானியம், குறைந்த வட்டியில் கடனுதவி போன்ற கோரிக்கைகளை, பிளாஸ்டிக் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.இவை அமல்படுத்தப்பட்டால், பிளாஸ்டிக் பொருட்கள் துறையின் ஏற்றுமதி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)