பதிவு செய்த நாள்
28 ஜூலை2021
19:17
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டி.என்.பி.எல்) விளையாட்டின் அதிகாரப்பூர்வ கூட்டு செயல்பாட்டு பங்குதாரர் ஆகியிருக்கும் அப்ஸ்டாக்ஸ், தமிழகத்தில் முதலீட்டு கலாச்சாரத்தை வளர்க்க புதிய வியூகத்தை வகுத்துள்ளது. இரண்டு வருட காலத்திற்கு தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ கூட்டு செயல்பாட்டு பங்குதாரராக இணைந்துள்ள அப்ஸ்டாக்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு தளங்களில் ஒன்றாகும்.
அப்ஸ்டாக்ஸ் 2009ம் ஆண்டு முதல் பங்குகள், பரஸ்பர நிதிகள், #டிஜிட்டல் தங்கம், டெரிவேட்டிவ்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான இடிஎப் நிதிகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை எளிய முறையில் வழங்கி வருகிறது.அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் தற்போது 4.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் உடனான புதிய கூட்டு செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த அப்ஸ்டாக்ஸின் இணை நிறுவனர் ஸ்ரீனி விஸ்வநாத் “டி.என்.பி.எல்-ன் அதிகாரப்பூர்வ பங்குதாரராக கைக்கோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டி.என்.பி.எல் தொடர்ந்து தமிழ்நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து பல புதிய இளம் திறமைசாலிகளை உருவாக்கி வருகிறது. இது இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களுக்கும் பங்கு முதலீட்டை கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற எங்கள் இலக்கை போன்றே அமைந்திருக்கிறது. அப்ஸ்டாக்ஸில், ஒரு முதலீட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான யோசனையுடன் நாங்கள் களமிறங்கி இருக்கிறோம்’ என்றார்.
அப்ஸ்டாக்ஸைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அதன் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும். அப்ஸ்டாக்ஸின் வாடிக்கையாளர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்களில் சுமார் 60 சதவீதம் பேர் முதல் முறையாக முதலீட்டை மேற்கொள்ளும் முதலீட்டாளர்கள். மேலும் 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பெண்கள் முதலீட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த புதிய கூட்டு செயல்பாடு, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் இதரப் பகுதிகளில் அப்ஸ்டாக்ஸின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|