மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு உயர்வு: ‘புளும்பெர்க்’ மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு உயர்வு: ‘புளும்பெர்க்’ ...  தங்கத்தின் தேவை 76 ‘டன்’னாக உயர்வு தங்கத்தின் தேவை 76 ‘டன்’னாக உயர்வு ...
ஜி.எஸ்.டி., வரியினங்களை குறைக்க அரசு பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
21:10

புதுடில்லி:ஜி.எஸ்.டி., வரியினங்களை, ஐந்தில் இருந்து மூன்றாக குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரியில் 0.25 சதவீதம், 5,12,18 மற்றும் 28 சதவீதம் என, ஐந்து வரியினங்கள் உள்ளன.இது குறித்து ‘அசோசெம்’ கருத்தரங்கில், கே.வி.சுப்ரமணியன் கூறியதாவது:மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யில் மூன்று வரியினங்களைத் தான் அறிமுகப்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், நிர்வாக வசதிக்காக, ஐந்து பிரிவுகள் அமல்படுத்தப் பட்டன. இதுவும் மிகச் சிறந்தது என்பேன்.

ஏனெனில், எந்தெந்த வரியினங்களில் எவ்வளவு வரி வசூலாகிறது என்பதை அறிய முடிகிறது. அதற்கேற்ப, கொள்கைகளை வகுப்பது சுலபமாக உள்ளது. எனினும் ஜி.எஸ்.டி., யில் சீர்திருத்தம் செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஐந்து வரியினங்களை மூன்றாக குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த சீர்திருத்தம் நடைபெறும் என நம்புகிறேன்.

மேலும், மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை விட, அவற்றின் மூலம் தயாரிக்கப் பட்டு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் வரி அதிகமாக உள்ளது தொடர்பான பிரச்னைகளும் சரி செய்யப்படும். உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

ஆனால், வங்கித் துறை, உலக வங்கிகளுக்கு நிகராக மேலும் வளர வேண்டும். உலகின் மிகப்பெரிய, 50 வங்கிகள் பட்டியலில், இந்திய வங்கிகள் இடம் பெற வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 55வது இடத்தில் உள்ளது.உலகின் 100 பெரிய வங்கிகள் பட்டியலில், அமெரிக்காவின் 12 வங்கிகள்; சீனாவின் 18 வங்கிகள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)