பதிவு செய்த நாள்
30 ஜூலை2021
20:09
புதுடில்லி:மத்திய அரசின் ‘பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டம்’ மூலம் 1.37 கோடி இளைஞர்கள் பயன் பெற்றுள்ளதாக பார்லி.,யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நேற்று பார்லி.,யில் பேசியதாவது:இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, தொழில் துவங்குவதை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை பெறவும் மத்திய அரசு, பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதில், குறுகிய கால பயிற்சி மற்றும் துறைசார் முன் அனுபவம் உள்ளோரின் திறனை மேம்படுத்தும் பயிற்சி என, இரு வகைகள் உள்ளன. இத்திட்டம் துவங்கப்பட்டது முதல், நடப்பு ஜூலை 10 வரை, 700 மாவட்டங்களைச் சேர்ந்த 1.37 கோடி பேர் பதிவு செய்து, தொழில் திறனை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை, இலக்கு அளவான 1.29 கோடியை விட அதிகம். இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்து 641 கோடியில், 8,805 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்டமாக எட்டு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|