பதிவு செய்த நாள்
05 ஆக2021
20:53
புதுடில்லி:கடந்த ஏப்ரல், மே மாதங்களில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வளர்ச்சி வேகமெடுத்துள்ளதாக, தொழில் துறை அமைப்பான பி.எச்.டி.சி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்து உள்ளதாவது:கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வருவதாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும், அரசின் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களாலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருந்த பாதிப்புகளிலிருந்து, பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது.
இந்நிலையில், மக்களின் நுகர்வை அதிகரிக்கவும், தனியார் முதலீடுகளை அதிகரிக்கவும், அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மேலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு, கூடுதலான நேரடி நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக, உள்நாட்டு பொருளாதாரத்தில் தேவைகள் அதிகரித்து, பொருளாதாரம் இன்னும் வேகமான மீட்சியை காணும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|