பதிவு செய்த நாள்
05 ஆக2021
21:02
புதுடில்லி:மின்சார வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து அரசு விலக்கு அளித்திருப்பது, விற்பனையை அதிகரிக்க உதவும் என, முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ‘ரிவோல்ட்’ தெரிவித்துள்ளது.
அண்மையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மின்சார வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. மேலும், பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
இது குறித்து, ரிவோல்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை இத்துறைக்கு வழங்கி வருகிறது. பெட்ரோல் வாகனங்களை விட, மின்சார வாகனங்களை வாங்கலாம் என, மக்கள் கருதும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
மத்திய அரசு, அண்மையில் மின்சார வாகனங்களுக்கான ஊக்கச் சலுகையை 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்து அறிவித்தது. இதனால், மின்சார வாகனங்களின் விலை பெருமளவு குறைந்தது.மேலும், பெட்ரோல் வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவைகள் வரி 28 சதவீதமாக இருக்கும் நிலையில், மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பல மாநில அரசுகளும் பல்வேறு ஊக்க சலுகைகளை வழங்கி வருகின்றன.
ஏற்கனவே, ‘பேட்டரி’ விலை குறைந்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள், பெட்ரோல் வாகனங்களுக்கு இணையான விலையை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றன. இந்நிலையில், பதிவு சான்றிதழ் கட்டணத்தில் விலக்கு கொடுத்துள்ளது, மின்சார வாகன விற்பனைக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|