பதிவு செய்த நாள்
09 செப்2021
21:20
புதுடில்லி:நாட்டின் அடிப்படை பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ள காரணத்தால், கொரோனா தாக்கத்திலும் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2021–22ம் நிதியாண்டின், ஏப்.,– ஜூன் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 20.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மைனஸ் 24.4 சதவீதமாக பின்னடைவைக் கண்டிருந்தது. வேளாண் துறையில், செப்.,3 நிலவரப்படி கரீப் பருவ சாகுபடி, 101 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலத்தில், 9 சதவீதம் குறைந்திருந்தது.நெல் கொள்முதலில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத தயாரிப்பு துறை குறியீடு, 95 சதவீதம் வரை எட்டியுள்ளது.ஜூலையில், எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி குறியீடு, 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மின்சாரம், சரக்கு ரயில் போக்குவரத்து, சுங்கச் சாவடி வசூல், ‘இ – வே பில், டிஜிட்டல்’ பரிவர்த்தனை, விமான சேவை, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவை வாயிலான வருவாய் அதிகரித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலும், இந்திய பொருளாதாரம், வீழ்ச்சியில் இருந்து ‘வி’ வடிவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு காரணிகள் வலுவாக உள்ளது தான் காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|