பதிவு செய்த நாள்
09 செப்2021
21:23
மும்பை:முகேஷ் அம்பானியின்,ரிலையன்ஸ் நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த, பி.பி., நிறுவனத்துடன் இணைந்து, மின்சார வாகனங்களை ‘சார்ஜ்’ செய்யும் மையங்களை அமைக்க உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக, நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் உள்ளன. அத்துடன், பி.பி., நிறுவனத்துடன் இணைந்து, வாகனங்களுக்கான எரிவாயு விற்பனை மையங்களையும், ரிலையன்ஸ் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நாடு முழுதும் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்களை அமைப்பதற்காக, ரிலையன்ஸ் ஜியோ – பி.பி., நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையங்களில், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய, வாடகை கார் சேவையில் ஈடுபட்டுள்ள புளுஸ்மார்ட் நிறுவனத்துடன், ஜியோ–பி.பி., நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதனால், இனி, புளுஸ்மார்ட் மின் வாகனங்கள், நாடு முழுதும் அமைய உள்ள ஜியோ–பி.பி., நிறுவனத்தின் மின் சார்ஜ் மையங்களில் மின்சாரத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும். பிரிட்டனில், மின்சார வாகன சார்ஜ் மையங்களை நிர்வகிப்பதில், பி.பி.,பல்ஸ் முதலிடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|