பதிவு செய்த நாள்
18 செப்2021
19:56
புதுடில்லி:இந்தியாவை பொறுத்தவரை, எதிர்காலத்தில், டிஜிட்டல் வாயிலாகவே முழு சேவைகளை வழங்கும், ‘நியோ’ வங்கி எனப்படும் ஸ்மார்ட் வங்கிகளை அனுமதிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அவற்றை கட்டுப்படுத்த தற்போது சட்டம் எதுவும் இல்லை என்றும், முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார்.
நிதிதொழில்நுட்ப வங்கிகள் அல்லது நிறுவனங்கள், ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, பணம் செலுத்துவதுடன் தொடர்புடைய ஒன்றாகும்.நியோ வங்கிகள், ஒழுங்குமுறைக்கு உட்படாத, கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இந்த நியோ வங்கிகள் செயலிகளை கொண்டு முழுக்க முழுக்க ‘ஆன்லைன்’ வாயிலாக செயல்படும். இவற்றை, ‘ஸ்மார்ட் வங்கி’ என்றும் அழைப்பர்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:உலகின் பல நாடுகள், கிளைகள் எதுவும் கொண்டிராத, நியோ வங்கிகளை அனுமதித்துள்ளன. ஆனால், இந்தியாவின் விதிமுறைகள் இன்னும் அவற்றுக்கு எதிரானதாகவே இருக்கிறது.கடன் மேலாண்மை தொடர்பான எந்த ஒரு அடிப்படைக் கொள்கையோ அல்லது சட்டமோ நம்மிடம் இல்லை. நம்மிடம் பணம் செலுத்துதல் சம்பந்தமாகவே கொள்கைகள், சட்டங்கள் உள்ளன. அதனால் நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது ரிசர்வ் வங்கிக்கு எளிதாக இருக்கிறது.
ஆனால், நாளை ரிசர்வ் வங்கி இத்தகைய நியோ வங்கிகளை எந்த சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அவற்றை ஒழுங்குபடுத்தும்?எனவே கடன் வழங்கும் இந்த நியோ வங்கிகளை வரையறுக்கவும், ஒழுங்குபடுத்தவும் நாம் சில சட்டங்களை கொண்டு வர வேண்டும். அவர்களுக்கான ஒரு கட்டுப்பாட்டாளர் வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|