வீட்டுக் கடனில் சலுகைகள் எஸ்.பி.ஐ., அறிவிப்பு வீட்டுக் கடனில் சலுகைகள் எஸ்.பி.ஐ., அறிவிப்பு ...  ஆயிரம் சந்தேகங்கள் அரசு ஊழியர்கள்  பங்குகளை வாங்கலாமா? ஆயிரம் சந்தேகங்கள் அரசு ஊழியர்கள் பங்குகளை வாங்கலாமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ஸ்மார்ட் வங்கிகளை கட்டுப்படுத்தசட்டம் இல்லை சுபாஷ் சந்திர கார்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2021
19:56

புதுடில்லி:இந்தியாவை பொறுத்தவரை, எதிர்காலத்தில், டிஜிட்டல் வாயிலாகவே முழு சேவைகளை வழங்கும், ‘நியோ’ வங்கி எனப்படும் ஸ்மார்ட் வங்கிகளை அனுமதிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அவற்றை கட்டுப்படுத்த தற்போது சட்டம் எதுவும் இல்லை என்றும், முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார்.

நிதிதொழில்நுட்ப வங்கிகள் அல்லது நிறுவனங்கள், ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, பணம் செலுத்துவதுடன் தொடர்புடைய ஒன்றாகும்.நியோ வங்கிகள், ஒழுங்குமுறைக்கு உட்படாத, கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இந்த நியோ வங்கிகள் செயலிகளை கொண்டு முழுக்க முழுக்க ‘ஆன்லைன்’ வாயிலாக செயல்படும். இவற்றை, ‘ஸ்மார்ட் வங்கி’ என்றும் அழைப்பர்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:உலகின் பல நாடுகள், கிளைகள் எதுவும் கொண்டிராத, நியோ வங்கிகளை அனுமதித்துள்ளன. ஆனால், இந்தியாவின் விதிமுறைகள் இன்னும் அவற்றுக்கு எதிரானதாகவே இருக்கிறது.கடன் மேலாண்மை தொடர்பான எந்த ஒரு அடிப்படைக் கொள்கையோ அல்லது சட்டமோ நம்மிடம் இல்லை. நம்மிடம் பணம் செலுத்துதல் சம்பந்தமாகவே கொள்கைகள், சட்டங்கள் உள்ளன. அதனால் நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது ரிசர்வ் வங்கிக்கு எளிதாக இருக்கிறது.

ஆனால், நாளை ரிசர்வ் வங்கி இத்தகைய நியோ வங்கிகளை எந்த சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அவற்றை ஒழுங்குபடுத்தும்?எனவே கடன் வழங்கும் இந்த நியோ வங்கிகளை வரையறுக்கவும், ஒழுங்குபடுத்தவும் நாம் சில சட்டங்களை கொண்டு வர வேண்டும். அவர்களுக்கான ஒரு கட்டுப்பாட்டாளர் வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)