பதிவு செய்த நாள்
21 செப்2021
09:01
நம்பாதீங்க
‘மும்பை பங்குச் சந்தை’யில் பட்டியலிடப்பட்டுள்ள, ‘பி.எல்.எஸ்., இன்டர்நேஷனல்’ நிறுவனம், தங்களது நிறுவன பங்குகள் குறித்து, தவறான தகவல்கள் குறுஞ்ச்செய்திகள் வாயிலாக பரப்படுவதாக, டெல்லி ‘சைபர் கிரைம்’ பிரிவில் புகாரளித்துள்ளது.மேலும், இத்தகைய குறுஞ்செய்திகள் எதையும் நம்ப வேண்டாம் என முதலீட்டாளர்களையும் இந்நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.***
வகுப்புகள்
சேவைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில், ஏற்றுமதியாளர்களுக்காக வகுப்புத் தொடர் ஒன்றை துவங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் கீழ், ஏற்றுமதியாளர்களுக்கான பட்டறைகள், பயிற்சி அமர்வுகள் உள்ளிட்டவை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வியாபாரத்தில், சேவை ஏற்றுமதியாளர்களை மேம்படுத்துவதும், பயிற்சி அளிப்பதும் இந்த வகுப்புகளின் முக்கிய குறிக்கோள் ஆகும் என்றும், கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தி
‘அமேசான் இந்தியா’ பிராந்திய மொழிகளிலும் குரல் வழியாகவே பொருட்களை வாங்கும் சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.முதல்கட்டமாக இந்தி மொழியில், ‘வாய்ஸ் ஷாப்பிங்’ சேவையையை, அடுத்த சில வாரங்களுக்குள்ளாக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.இதன் வாயிலாக, பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மொழித் தடை நீங்கி, மின்னணு வர்த்தக அனுபவத்தை பெற இயலும் என, அமேசான் தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்.,
‘பேஸ்புக் இந்தியா’ நிறுவனம், அதன் பொது கொள்கை இயக்குனராக, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், முன்னாள் ஊபர் நிர்வாகியுமான ராஜீவ் அகர்வாலை நியமித்துள்ளதாக, நேற்று அறிவித்துள்ளது.வாடிக்கையாளர்களின் தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் இணைய நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய, முக்கியமான கொள்கை மேம்பாட்டு முயற்சிகளை வரையறுத்து, அகர்வால் வழிநடத்துவார் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
‘ஐ.சி.ஐ.சி.ஐ., ஹோம் பைனான்ஸ்’ நிறுவனம், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக, 600 பேர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.நாடுமுழுக்க உள்ள கிளைகளின் வாயிலாக, விற்பனை மற்றும் கடன் பிரிவில் பணியமர்த்தப்படுவர் என்று தெரிவித்துள்ளது.அண்மைக் காலத்தில், வீட்டு கடனுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் வகையில், புதிய நபர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும், ஐ.சி.ஐ.சி., ஹோம் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|