பதிவு செய்த நாள்
21 செப்2021
09:09
புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளில், செப்டம்பர் மாதத்தில் இதுவரை 16 ஆயிரத்து, 305 கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.மதிப்பீட்டு காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகளில் 11 ஆயிரத்து, 287 கோடி ரூபாயையும்; கடன் பிரிவில் 5,018 கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அன்னிய முதலீடு 16 ஆயிரத்து, 459 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக, அன்னிய முதலீட்டாளர்களால் தவிர்க்க இயலாத சந்தையாக இந்திய பங்குச் சந்தைகள் உள்ளன. மேலும், அவர்கள் இப்போது ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா பிரிவில் முதலீடுகளை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். இந்த துறை தற்போது மீட்சி காணத் துவங்கி இருப்பதால், அவற்றில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அமெரிக்காவில் வட்டிவிகிதம் உயர்த்தப்படும் பட்சத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் சந்தைகளில் முதலீடு செய்வதிலிருந்து வெளியேறவும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|