பதிவு செய்த நாள்
21 செப்2021
19:24
மாருதி
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், தொடர்ந்து அதிக எரிபொருள் செயல்திறன் கொண்ட கார்களை தயாரித்து அறிமுகம் செய்யும் என்றும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்குவது குறித்து முடிவெடுக்கும்போது, இந்த எரிபொருள் செலவு இப்போதும் முக்கிய காரணியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ.,
வங்கிகளில் வைப்பு தொகை வைத்திருக்கும் சில்லரை டெபாசிட்தாரர்கள், மிக குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள். எனவே, வட்டி மீதான வரிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைவருக்கும் இல்லாவிட்டாலும், வட்டியை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்காவது வட்டியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, எஸ்.பி.ஐ.,யின் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமேசான்
அமேசான் நிறுவனம், இந்தியாவில் தன்னை தக்கவைத்து கொள்ள, சட்ட செலவுகளுக்காக, கடந்த 2018_20 ஆண்டுகளில் மட்டும் 8,546 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமேசான் குழுமத்தை சேர்ந்த ஆறு நிறுவனங்களுக்காக, இந்த தொகை செலவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.மேலும், அமேசான் அதன் வருவாயில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அளவுக்கு, வழக்கறிஞர்களுக்காக செலவழித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதானி
முகேஷ் அம்பானி, புதுப்பிக்கத் தகுந்த எரிசக்தி துறையில் 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத் தகுந்த எரிசக்தி துறையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 1.48 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ரிலையன்ஸை விட இரு மடங்கு அதிகமாக முதலீடு செய்ய தயாராக இருக்கிறார் அதானி.
ஏர் இந்தியா
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை தனியார்மயமாக்குவதில் அரசு மும்முரமாக உள்ளது. ‘டாடா குழுமம்’ உள்ளிட்ட சில நிறுவனங்கள், ஏர் இந்தியாவை வாங்க முன்வந்து விண்ணப்பித்து உள்ளன. ஏர் இந்தியாவை கையகப்படுத்தும் முயற்சிகளை, டாடா குழுமம் மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு உதவ எஸ்.பி.ஐ., முன்வந்துள்ளதாக தெரிகிறது.டாடா குழுமத்தின் கடன் பெறும் தகுதி மிகச் சிறப்பாக இருப்பதால், ஏர் இந்தியாவை வாங்குவதற்கு தேவையான நிதியை, எஸ்.பி.ஐ., கடனாக வழங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|