பதிவு செய்த நாள்
21 செப்2021
19:26
புதுடில்லி:முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான, அமேசானுக்கு எதிரான லஞ்சம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான சி.ஏ.ஐ.டி., மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அத்துடன், அமேசான் இணையதளத்தை இடைநிறுத்தவும், விசாரணை நடக்கும் கால கட்டத்தில் அதன் செயல்பாடுகளை நிறுத்தவும் உத்தரவிட வேண்டும் என்றும், சி.ஏ.ஐ.டி., கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அக்கடிதத்தில், இந்த விவகாரம் மிகவும் முக்கியமான ஒன்று என்றும், செல்வாக்கு, துஷ்பிரயோகம், அரசு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு காரியங்கள் சாதிப்பது போன்றவற்றிலிருந்து மின்னணு வர்த்தக சந்தை மற்றும் சில்லரை வர்த்தகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் சட்ட பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டை அடுத்து, இந்த கடிதத்தை வர்த்தகர்கள் கூட்டமைப்பு எழுதியுள்ளது.இதற்கிடையே, அமேசான் நிறுவனம், லஞ்சம் வழங்கியது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இது போன்ற விஷயங்களை நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|