பதிவு செய்த நாள்
21 செப்2021
19:33
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த நிறுவனமான, ‘புரானிக் பில்டர்ஸ்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்குகள் வெளியீட்டின் வாயிலாக, 510 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இப்பங்கு வெளியீட்டின் போது, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும், 9.45 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.மும்பையை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், கடந்த 31 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மும்பை, புனே ஆகிய இடங்களில், நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கான வீடுகளை கட்டி, விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம், இதற்கு முன் இரு முறை பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக செபியிடம் அனுமதி பெற்றும், சந்தை சூழல் காரணமாக, முயற்சியை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|