பதிவு செய்த நாள்
22 செப்2021
20:22
பதவிக் காலம் முடிவு‘
மாஸ்டர்கார்டு’ நிறுவனத்தின் செயல் தலைவர் அஜய் பங்கா, இந்த ஆண்டு இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுக்கு பின், நிறுவனத்தின் செயல் சாரா இயக்குனராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜய் பங்கா, புனேயில் பிறந்தவர். 2016ல்இவருக்கு, ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் எனஅறிவித்திருந்த, ‘ஆசிய மேம்பாட்டு வங்கி’தற்போது 10 சதவீதமாக இருக்கும் என குறைத்துஅறிவித்துள்ளது.இரண்டாவது அலை காரணமாக, பொருளாதார மீட்சி கடுமையாக பாதிக்கப்பட்டதால்,வளர்ச்சிக் கணிப்பை குறைத்துள்ளதாக,இவ்வங்கி தெரிவித்துள்ளது.
பதவி நீட்டிப்பு
ஐ.எல்.எப்.எஸ்., குழுமத்தின் செயல் சாரா தலைவராக, உதய் கோட்டக் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பார் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு, இவரது இந்த பதவிக் காலத்தை 12 மாதங்களுக்கு நீட்டித்து, இந்த ஆண்டுஅக்டோபர் 2ம் தேதிவரை பதவி வகிப்பார் எனஅறிவிக்கப்பட்டது. தற்போது மேலும்நீட்டிக்கப்பட்டுள்ளது.உதய் கோட்டக் தற்போது, ‘கோட்டக்மகிந்திரா வங்கி’யின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
பயனர் எண்ணிக்கை
‘மும்பை பங்குச் சந்தை’யின் முதலீட்டாளர் கணக்கு எண்ணிக்கை, கடந்த ஜூன் 6ம் தேதியில் இருந்து செப்டம்பர் 21ம் தேதி வரையிலானகாலத்தில், ‘ஒரு கோடி’ என்ற அளவுக்குஅதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 6ம் தேதியன்று, பயனர்களின் எண்ணிக்கை 7 கோடியாக இருந்தது. இதன் பின் 107 நாட்களில் 8 கோடியை எட்டியுள்ளது.
ரூபாய் மதிப்பு
சீனாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘எவர்கிராண்டு’ கடனில் சிக்கியுள்ளதை அடுத்து, வளரும் நாடுகளுடைய பணத்தின் மதிப்புசரிவைக் காணும் என்றும், அதன் பாதிப்பு, இந்திய ரூபாயிலும் பிரதிபலிக்க கூடும் என்றும்‘எச்.டி.எப்.சி., வங்கி’யின் பொருளாதார அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|