வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்தும் ஏர்டெல்வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்தும் ஏர்டெல் ... புதிய உச்சம் : சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது புதிய உச்சம் : சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது ...
80 சந்தைகளில் 150 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கும் லிவ்ஸ்பேஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
10:15

இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய வீட்டு உள் அலங்காரம் மற்றும் சீரமைப்பு தளமான லிவ்ஸ்பேஸ் நிறுவனம் 80 சந்தைகளில் தனது விரிவாகத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இவற்றுள் இந்தியாவில் உள்ளவை 60 மற்றும் ஆசிய பசிபிக் நகரங்களில் உள்ளவை 20 ஆகும்.

லிவ்ஸ்பேஸ் நிறுவனம் வீட்டு உள் அலங்காரத் துறையில் 65% சந்தைப் பங்கை வைத்துள்ளது. அடுத்த 18 மாதங்களில் 150 வடிவமைப்பு எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக வெளிநாடுகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்த 50 மில்லியன் அமெரிக்க டார்களை முதலீடு செய்யவும் லிவ்ஸ்பேஸ் திட்டமிட்டுள்ளது.

இதுப்பற்றி இந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ரமாகாந்த் சர்மா கூறுகையில் ‘ அமைப்பு உருவாக்கம், விலை, காலவரிசை, தரம், விற்பனைக்குப் பின் சேவை என மிகச் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதே லிவ்ஸ்பேஸ் நோக்கமாகும். தற்போதைய சந்தைகளில் இதுவரை 30,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு லிவ்ஸ்பேஸ் உறுதிப்படுத்திய அனுபவத்தை வழங்கியுள்ளது. எங்களது ‘எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள்’ வாடிக்கையாளர் பயணம் முழுமைக்கும் இந்த அனுபவத்தை வழங்குவதில் முக்கியப் பங்கை வகிக்கிறது. இந்தியாவில் 60க்கும் மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் 20க்கும் அதிகமான நகரங்களில், மேலும் 150 வடிவமைப்பு எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை நிறுவுவதன் மூலம், புதிய சந்தைகளுக்கும் இதே சிறப்பை வழங்க உள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவம், தனிப்பயனாக்கம் மற்றும் கொள்முதல் தீர்வுகளை பன்னாட்டு பிராண்ட்களிலிருந்து பெற உதவுவோம்’ என்றார்.

லிவ்ஸ்பேஸ் நாடு முழுவதுமுள்ள 1000க்கும் அதிகமான புதிய வடிவமைப்பு தொழில்முனைவோர்களை ஒருங்கிணைக்க உள்ளது. வியாபாரத்தை வளர்க்கத் துறையின் சிறந்த தொழில்நுட்ப தளம், டிஜிடல் வழங்கு சங்கிலித் தொடர், நம்பகமான பிராண்ட் ஆகியவற்றின் அணுக்கம் ஆகியவை மூலம் முனைவு வடிவமைப்பு ஸ்டூடியோ உரிமையாளர்கள் சமூகத்தை உருவாக்க உதவும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)